இத்தாலியில் எரிமலை வெடித்ததால் 2 விமான நிலையங்கள் மூடல்

இத்தாலியில் எரிமலை வெடித்ததால் 2 விமான நிலையங்கள் மூடப்பட்டன.

Update: 2019-07-20 18:45 GMT
ரோம்,

இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள எத்னா எரிமலை நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெடித்தது. இதனால் 1.5 கி.மீ. தொலைவுக்கு எரிமலைக்குழம்பு பரவி உள்ளது. மேலும் சாம்பலும், கரும்புகையும் பரவி வருவதால் அருகில் உள்ள 2 விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. எனினும் எரிமலைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்