சீனாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவு
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவானது.
பிஜீங்,
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இன்று இரவு 8.23 (பிஜீங் நேரம்) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகள் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இன்று இரவு 8.23 (பிஜீங் நேரம்) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகள் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.