பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; 8 பேர் பலி

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-07-27 03:35 GMT
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கியது.  இங்குள்ள லூஜன் தீவின் வடக்கே இத்பயாத் நகரின் வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டரில் 5.4 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தினால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.

அதிகாலை வேளையில் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.  எனினும் சில இடங்களில் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.

இதில் 8 பேர் பலியகினர்.  60 பேர் காயமடைந்தனர் என மேயர் சாகன் உறுதிப்படுத்தி உள்ளார்.  இதனை அடுத்து காலை 7.38 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 6.4 ஆக பதிவானது.  பஸ்கோ மற்றும் சப்தங் நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்