ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட பாகிஸ்தான் கோரிக்கை
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “இந்தியாவின் செயல் அரசியல் சட்டத்துக்கும், ஐ.நா. மரபுகளுக்கும் விரோதமானது. எங்கள் தரப்பு நியாயத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று குரேஷி கூறியுள்ளார்.