இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை: “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்”

காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது; அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

Update: 2019-08-17 23:45 GMT
வாஷிங்டன், 
 
பாகிஸ்தானுக்கு இந்த அதிரடி நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப்பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவருடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது காஷ்மீர் பிரச்சினையில், இரு தரப்பு பேச்சு நடத்தி, இந்தியா உடனான பதற்றத்தை தணிக்க வேண்டியதின் அவசியம் குறித்து இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ஹோகன் கிட்லே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்