அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டோன் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் கோயல்முடி (வயது 23) மற்றும் தேஜா கவுசிக் (22) ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

Update: 2019-09-05 22:30 GMT
வாஷிங்டன், 

நண்பர்களான இவர்கள் இருவரும் விடுமுறையையொட்டி ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ஆற்றில் இறங்கி இருவரும் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற தேஜா கவுசிக் திடீரென நீரில் மூழ்கினார். உடனடியாக அஜய்குமார் அவரை காப்பற்ற சென்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய இருவரையும் தேடினர். ஆனால் இருவரையும் பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. 

மேலும் செய்திகள்