பாக்தாதியின் உள்ளாடைகள் டி.என்.ஏ சோதனை உட்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டதாக தகவல்
ஐ.எஸ் அமைப்பின் தலைவரின் பாக்தாதியின் உள்ளாடைகள் டி.என்.ஏ சோதனை உட்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்
சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார்.
குர்திஷ் தலைமையிலான எஸ்.டி.எப் இன் மூத்த ஆலோசகரான பொலட் கேன், பாக்தாதியைக் கண்டுபிடிக்க எஸ்.டி.எஃப் உளவுத்துறை எவ்வாறு உதவியது என்பது குறித்த விவரங்களை தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
ஐஎஸ் அமைப்பு தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் உள்ளாடைகள் ரகசியமாக பெறப்பட்டன, மேலும் அவரைக் கொல்ல அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு முன்னர் அவரது அடையாளத்தை நிரூபிக்க டி.என்.ஏ சோதனை செய்யப்பட்டது என்று சிரிய ஜனநாயகப் படைகளின் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
அனைத்து புலனாய்வு மற்றும் அல்-பாக்தாதியை நெருங்கியது மற்றும் அவரது இடத்தை அடையாளம் கண்டது ஆகியவை எங்கள் சொந்த முயற்சியின் விளைவாகும். எங்கள் உளவுத்துறை ஆதாரங்கள் விமான நிலையத்தை இயக்குவது, பங்கேற்பது மற்றும் கடைசி நிமிடம் வரை செயல்பாட்டை வெற்றிகரமாக மாற்றுவதில் ஈடுபட்டன என கூறினார்.