நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது; 15 பேர் பலி

நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-11-04 02:14 GMT
காத்மண்டு,

நேபாள நாட்டில் காத்மண்டு நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.  அந்த பேருந்து சிந்துபால் சவுக் என்ற நகர் பகுதியில் சென்றபொழுது, சன்கோஷி ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.  2 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தில் பேருந்து பயணிகளில் 3 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்