ரஷ்யாவில் கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கி சூடு; மாணவர் பலி

ரஷ்யாவில் கல்லூரி வளாகத்துக்குள் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2019-11-14 12:21 GMT
மாஸ்கோ,

ரஷ்யாவின் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உடன் பயின்ற மாணவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்