சீனாவில், சமையல் பாத்திரத்திற்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்பு

சீனாவில் சமையல் பாத்திரத்திற்குள் தலையைவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

Update: 2020-01-07 06:43 GMT
பீஜிங்

சீனாவின் ஷன்மு என்ற பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, இரவு நேரத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது, குறுகலான வாய்கொண்ட தேநீர் தயாரிக்கும் பாத்திரத்திற்குள் குழந்தையின் தலை எதிர்பாராதவிதமாக சிக்கி  உள்ளது.

குழந்தை சிக்கித் தவித்ததையடுத்து, மீட்பு படையினருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சமபவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் பாத்திரத்தை அறுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.


மேலும் செய்திகள்