ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

Update: 2020-01-11 08:10 GMT
வாஷிங்டன்,

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்கி கொன்றதால் பதிலுக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானின்,  உற்பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்