அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்தது; 4 பேர் சாவு

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Update: 2020-01-23 22:45 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோரோனா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க தொடங்கிய சில நொடிகளில் திடீரென விமானியின் காட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமான நிலையத்தின் எல்லை சுவர் மீது விமானம் மோதி தீப்பிடித்தது.

பின்னர் தரையில் விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து உருகுலைந்து போனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்