தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி
தெற்கு ஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெர்லின்,
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ளது ரோட் ஆம் சீ நகரம். இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.