ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

Update: 2020-02-19 10:05 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கிராமப்புற பகுதியில் இன்று முற்பகலில் 2 விமானங்கள் பறந்து சென்றுள்ளன.  விமானங்கள் தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தபொழுது, நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

அவை தீப்பிடித்தபடியே வயலில் விழுந்து நொறுங்கின.  விபத்தில் இரு விமானங்களின் பாகங்களும் உடைந்து, தீப்பிடித்து ஆங்காங்கே கிடந்தன.  இதில் இரு விமானங்களிலும் இருந்த தலா 2 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்