ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாகினர்.

Update: 2020-03-10 22:21 GMT

* சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கெர்சி நகரில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாகினர்.

* ஆப்பிரிக்க நாடான கானாவின் கின்டாம்போ நகரில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

* சீனாவின் குவான்சு நகரில் கொரோனா கண்காணிப்பு மையமாக இயங்கி வந்த 5 மாடிகளை கொண்ட ஓட்டல் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்