உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவு
உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவிடப்பட்டது.
பாரீஸ்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேற்று கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தன.
அந்தவகையில், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோர் நேற்று வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.