கொரோனா வைரஸ் பாதிப்பு: நியூயார்க் நகரில் ஒரே நாளில் 731 பேர் பலி
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நியூயார்க் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் 731 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்,
சீனாவின் ஹுபேய் மாகாணத்தின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.
உலக நாடுகளைவிட அதிவேகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
தூங்காத நகரம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கொரோனா வைரஸ் தொற்றால் உருக்குலைந்து போயுள்ளது.
நியூயார்க் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 731 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அந்நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 5,489 ஆக அதிகரித்துள்ளது என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கவுமோ தெரிவித்துள்ளார்.