இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் கைது

இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-16 22:45 GMT
லண்டன், 

இங்கிலாந்தின் மத்திய பகுதியில் வால்வர்ஹாம்டன் நகரில் உள்ள காட்டு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பர்மிங்ஹாம் நகரை சேர்ந்த கரீகா கொனிடா கார்டன் என்ற 27 வயது பெண், மற்றொரு பெண்ணை கொலை செய்து அவரது உடலை சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து கரீகா கொனிடா கார்டன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மகேஷ் சொராதியா (38) என்பவர் இந்த கொலையில் கரீகா கொனிடா கார்டனுக்கு உதவி செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, மகேஷ் சொராதியாவையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரையும் போலீசார் காவலில் வைத்து கொலைக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்