கொரோனாவுக்கு பிரேசிலில் ஒரே நாளில் 807 பேர் சாவு
கொரோனாவுக்கு பிரேசிலில் ஒரே நாளில் 807 பேர் உயிரிழந்தனர்.
ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 807 பேர் பலியானார்கள். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஒரே நாளில் 11 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்தை எட்டி உள்ளது. இறப்பு விகிதம் 6.3 சதவீதமாக உள்ளது.