கொரோனா உருவாகிய சீனாவிலேயே முதல் தடுப்பூசி கண்டு பிடிப்பு; ராணுவத்தில் பயன்படுத்த அனுமதி

கொரோனா உருவாகிய சீனாவிலேயே முதல் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது .

Update: 2020-06-30 06:25 GMT
பீஜிங்

சீனாவின் இராணுவம் அதன் ஆராய்ச்சி பிரிவு மற்றும் ஒரு பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை  பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது என்று நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியின் ஒரு பகுதியான கன்சினோ மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி இணைந்து உருவாக்கியது. மேலதிக ஒப்புதல்கள் இல்லாமல் அதன் பயன்பாட்டை விரிவாக்க முடியாது, என்று தெரிவித்துள்ளது. சீனாவின் மகத்தான இராணுவப் படைகளுக்குள் இது எவ்வளவு பரவலாகப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ள 17 முக்கிய  தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீன நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களை உள்ளடக்கியது. ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட கேன்சினோ பயோலாஜிக்ஸ்  சோதனைகளில் இருந்து சீன இராணுவ தடுப்பூசிக்கு “நல்ல பாதுகாப்பு சுயவிவரம்” இருப்பதாகவும், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் திறன் இருப்பதாகவும் சுட்டி காட்டி உள்ளது. இந்த தடுப்பூசியை ஜூன் 25 அன்று ஒரு வருடத்திற்கு பயன்படுத்த சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் ஒப்புதல் அளித்ததாக கன்சினோ தெர்இவித்துள்ளது.

மேலும் செய்திகள்