பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-03 00:09 GMT
பியூனஸ் அயர்ஸ்,

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இதில் 8¼ லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே 24 மணி நேரத்துக்குள் அங்கு புதிதாக 1,038 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் செய்திகள்