கொரோனாவை பயன்படுத்தி சொந்த ஆதாயம்: சீனா மீது விசாரணை கோரி மசோதா-அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

சீனா மீது விசாரணை கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-10 01:05 GMT
வா‌ஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜேர்டு கோல்டன் என்ற எம்.பி. ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதில், 13 எம்.பி.க்கள் ஆதரித்து கையெழுத்திட்டு இருந்தனர்.

மசோதாவில், தனது சொந்த ஆதாயத்துக்காக கொரோனா வைரஸ் சூழ்நிலையை பயன்படுத்தி சீனா மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தேசிய புலனாய்வு இயக்குனர் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

கொரோனாவை பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு எதிராக இணைய திருட்டு போன்ற குற்றங்களில் சீனா ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்