பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.6 லட்சம் ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.6 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.
லாகூர்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்க பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 400 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 468 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் 90,816 பேர் பஞ்சாப் மாகாணங்களிலும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 104 பேர் சிந்த் மாகாணங்களை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 5 ஆயிரத்து 675 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.