ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-15 18:44 GMT
மாஸ்கோ,

 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன்  சிகிச்சை பெற்று வந்த 150 பேர் , சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 -பேர்  முழுமையாக குணமடைந்துள்ளனா்.

மேலும் செய்திகள்