ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை ; இன்றும் ஒரு பத்திரிகையாளர் கொலை

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படு உள்ளனர்.

Update: 2020-12-11 15:42 GMT
காபூல்

ஆப்கானிஸ்தானில் இன்று மேலும் ஒரு  பத்திரிகையாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த மலாலாய் மெய்வான்ட் மற்றும் அவரது கார் ஓட்டுநர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட மலலாய், மகளிர் உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மலாலாய் மெய்வான்ட்  கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, மற்றொரு தாக்குதலில்  மற்றொரு பத்திரிகையாளர் பர்தின் அமினி இன்று தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலின் சரியான விவரம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், அமினி ஒரு "மர்மமான தாக்குதலில்" கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில், இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்