இங்கிலாந்தில் இன்று புதிதாக 41,346 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,295 பேர் பலி
இங்கிலாந்தில் இன்று புதிதாக 41,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் லண்டனில் பெரிய மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இன்று புதிதாக 41,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 33,57,361 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 1,295 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 88,590 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.