உக்ரைன் நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி

உக்ரைன் நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-01-22 05:25 GMT
கிவி

கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர் .மருத்துவமனையின் இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை உள்ளே 33 பேர் இருந்தனர்.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்