150 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது; வெளியுறவுத்துறை

பெருந்தொற்று காலத்தில் 150- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-01-28 00:52 GMT
புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று தருணத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல், தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்பான 14-வது ஆண்டு கலந்துரையாடலில்  ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:  

இந்தியாவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட அண்டை நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை வழங்கும் பணியை தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் பிற  நட்புறவு நாடுகளுக்கு வழங்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்