நைஜீரியாவில் மார்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

நைஜீரியாவில் மார்கெட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

Update: 2021-02-04 14:41 GMT

குவாரிம்பா

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குவாரிம்பா மாவட்டத்தில் உள்ள அபுஜா டிப்பர் மார்கெட்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பாக சுமார் 2 மணி நேரம் கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

மேலும் செய்திகள்