இங்கிலாந்தில் நவீன அடிமைத்தனம் குற்றங்களுக்காக 6 பேர் கைது
இங்கிலாந்தில் நவீன அடிமைப்படுத்துதல் குற்றங்களுக்காக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் லண்டன் பெருநகர போலீசார் வெளியிட்டு உள்ள செய்தியில், இங்கிலாந்து மற்றும் லண்டனில் மக்களை கடத்தி அடிமைகளாக நடத்தும் தகவல் எங்களுக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அதிரடியாக விசாரணை நடத்தியதில், 30 மற்றும் 55 வயதுக்கு உட்பட்ட 6 பேரை கைது செய்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற பாதிக்கப்பட்ட நபர்களில் நூற்றுக்கணக்கானவர்களை பாதுகாப்பதில் நாங்கள் பங்கு வகிக்கிறோம்.
ஆட்கடத்தல் மற்றும் கட்டாய தொழிலாளர் முறை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் பணியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். பொதுமக்களும் நவீன அடிமை முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கலாம் என்று கேட்டு கொண்டனர்.