மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ராணுவத்தால் சுடப்பட்ட மேலும் ஒருவர் மரணமடைந்தார்.

Update: 2021-02-20 18:23 GMT
மாண்ட்லே,

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.

அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர. இந்தத் தாக்குதலில் 20 வயதான மயா த்வாடே கைங் என்ற இளம்பெண் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தார். 

இந்த நிலையில் மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ராணுவத்தால் சுடப்பட்ட மேலும் ஒருவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்