பிரேசிலில் புதிதாக 29,026 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 554 பேர் பலி

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 90,95,483 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-02-22 01:09 GMT
கோப்புப்படம்
ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் 29,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,01,68,174 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 554 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,46,560 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90,95,483 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,26,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்