சார்ஜாவில், மரக்கன்று நடும் பணி தொடங்கியது

சார்ஜாவில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் சார்பில் நேற்று மரக்கன்று நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2021-02-22 10:17 GMT

சார்ஜா,

சார்ஜாவில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் சார்பில் நேற்று மரக்கன்று நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். ஒரு வாரத்தில் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற சார்ஜா அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்