புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி.

Update: 2021-02-24 10:55 GMT

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 297 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 295 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,557 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 64 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்