ஓமனில், கொரோனாவால் 311 பேர் பாதிப்பு

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-25 10:39 GMT

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 242 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் பலியானார். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,558 ஆக அதிகரித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் 75 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்