பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்சில் கடந்த 24- மணி நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-01 00:08 GMT
பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.  பிரான்சு பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பிரான்சில்  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 55 ஆயிரத்து 968- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 122 பேரும் இதுவரை 86,454- பேரும் பிரான்சில் உயிரிழந்துள்ளனர்.  பிரான்சில் இதுவரை 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்