தென் ஆப்பிரிக்கா: போலி தடுப்பூசிகள்; மந்திரி கவலை

தென் ஆப்பிரிக்க கருப்புச் சந்தையில் போலியான கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை மந்திரி ஸ்வெலி கைஸ் கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-12 23:20 GMT

தென் ஆப்பிரிக்க கருப்புச் சந்தையில் போலியான கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை மந்திரி ஸ்வெலி கைஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவா் கூறியதாவது:

நாட்டில் போலியான கொரோனா தடுப்பூசிகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக எங்களுக்கு காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இது மிகவும் கவலையளிக்கும் தகவலாகும். இந்த விவகாரத்தை சமாளிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்