இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-03-16 02:53 GMT
புதுடெல்லி

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து  வெளியேறிய பின் முதல் சர்வதேச பயணமாக இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்.

இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜனவரி மாதம்  இந்தியாவில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக  வர இந்திய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார், ஆனால் உள்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்