பர்தா தடை விதிப்பதில் அவசரம் காட்ட மாட்டோம்: இலங்கை

பர்தா தடை விதிப்பதில் அவசரம் காட்ட மாட்டோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

Update: 2021-03-16 23:28 GMT
கொழும்பு,

இலங்கையில் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிப்பதில் அவசரம் காட்ட மாட்டோம் என்று  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அனைத்து தரப்பினரிடமும் அலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே,  இது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார். 

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக பொது இடங்களில் பர்தாவுக்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக அண்மையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்