இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை: பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

இந்திய பயணிகள் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

Update: 2021-04-27 05:29 GMT
மெல்போர்ன்,
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.  இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும்  நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15 ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட்  மாரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் உள்ள  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்