பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-05-11 19:37 GMT
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி உள்பட போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது சோழவந்தான் பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய விக்னேஷ், முத்துவீரன், அழகர், மாரிச்செல்வம், செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்