சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்

சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Update: 2021-05-31 17:04 GMT
சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 

நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.  சிங்கப்பூரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  33-பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்