வடகொரியா: பொருளாதாரத்தை சீரமைத்தல் குறித்து அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஆலோசனை

வடகொரிய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடம் அதிபர் கிம் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-06-08 03:35 GMT
பியோங்யாங்,

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் உலக நாடுகளுடனான தொடர்பை வடகொரியா துண்டித்தது. மேலும், வெளிநாடுகளில் இருந்து சரங்குகப்பல்கள் வடகொரியாவுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

முன்னதாக, வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால், பாதிப்பை சந்தித்துள்ள வடகொரியா தற்போது கொரோனா பரவலை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்றுள்ளது. அந்நாட்டு மக்கள் போதிய வருமானம், வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக அதிபர் கிம் ஜங் உன் இன்று அதிகாரிகளுடம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஆலோசனைகளை வழங்கினார். நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிலையான மாற்றங்களை கொண்டுவர தேவையான திட்டங்களை அதிகாரிகளுக்கும் அவர் ஆலோசனையாக வழங்கினார்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் சிறிய அளவிலானது எனவும் இந்த வார இறுதிக்குள் மிகப்பெரிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் எனவும் வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்