புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2021-06-10 20:46 GMT

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 744 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில், 2 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 613 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 132 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 7 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,717 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் விரைந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்