ஓமனில் கடந்த 3 நாட்களில் கொரோனாவுக்கு 46 பேர் பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது

ஓமனில் கடந்த 3 நாட்களில் கொரோனாவுக்கு 46 பேர் பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது.

Update: 2021-06-14 14:11 GMT

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 4 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில் 46 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 513 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 374 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்