ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்

ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2021-06-28 17:23 GMT
எர்பட்,

ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் இன்று காலை சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த 2 பேரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கத்தி குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்