கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம்: உயர் அதிகாரிகளை நீக்கி கிம் ஜங் உன் நடவடிக்கை

கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவின் நட்பு நாடாகவும் வடகொரியா விளங்குகிறது.

Update: 2021-06-30 17:58 GMT
பியாங்யாங்,

 வட கொரியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதன் விளைவாக நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதற்காக அரசின் உயர் அதிகாரிகளை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடுமையாக கண்டித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு தொடர்ச்சியாக கூறி வருகிறது. தனது நட்பு நாடான சீனா உள்பட அண்டை நாடுகளுடனான எல்லையை வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி முதல் மூடியுள்ளது.

மேலும் செய்திகள்