ஈராக்கில் குண்டு வெடிப்பு- 30 பேர் பலி, 50 பேர் காயம்

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Update: 2021-07-19 23:05 GMT
பாக்தாத்,

 ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். 50- பேர் காயம் அடைந்தனர்.  பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க  பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தோரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலைப்படை தாக்குதலாக இது நடத்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.  

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணையை பாதுகாப்புப் படையினர் துவங்கி உள்ளனர்.  ஈராக்கில் சமீப காலங்களில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் இதுவாகும். 

மேலும் செய்திகள்