அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்

துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து பென்டகன் பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-08-03 16:00 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அமைந்துள்ள இடம் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

பென்டகன்  ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிலர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும்  தகவல்கள் கூறுகின்றன.  எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்