ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில், தலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் காயமடைந்து உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அவர்களில் 31 குழந்தைகள், 24 பெண்கள் அடங்குவார்கள். அவர்கள் ஹெராத் நகரில் உள்ள மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.